திருக்குறள்

866.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.

திருக்குறள் 866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.

பொருள்:

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

மு.வரததாசனார் உரை:

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.